ஜெனிவா விவகாரம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் இணக்கப்பாடு! – கஜேந்திரகுமார் தெரிவிப்பு

கள் சபை, அதன் ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்குத் தெளிவான செய்தியை இம்முறை வழங்க வேண்டியமை தொடர்பில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.”

– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

ஜெனிவா விவகாரங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம் வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் அவை பூஜ்ஜியத்தில் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான அணுகுமுறைகளை எடுப்பது என்பது தொடர்பில் இன்று பேசியிருந்தோம்.

2012ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி அந்த விடயத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்தி வந்திருக்கின்றது. அது தொடர்பிலும் பேசப்பட்டது.

மனித உரிமைகள் விடயத்தில் பொறுப்புக்கூறல் தொடர்பாக கட்சிகள் மட்டத்தில் இருக்கக்கூடிய பலவீனத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஓர் இணக்கப்பாடு வந்திருந்தது.

மேலதிகமாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் ஆகியன ஒரு புள்ளியில் சந்திக்கக்கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை, அதன் ஆணையாளர் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுக்குத் தெளிவான செய்தியை இம்முறை வழங்க வேண்டியமை தொடர்பில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிகமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு நான், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், சிவில் சமூகப் பிரதிநிதிகளின் அமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய அமைப்பு உள்ளிட்ட ஒரு குழு இணைந்து ஒரு புள்ளி என்ற விடயத்தை எழுத்து மூலம் ஆவணப்படுத்துவதற்கு இணங்கியிருக்கின்றோம். மி கவிரைவில் அது முன்னெடுக்கப்படும். அதை ஓர் ஆரம்பமாக வைத்து அடுத்தகட்ட சந்திப்புகளை மேற்கொள்வதற்கு நாம் இணங்கியிருக்கின்றோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.