இலங்கையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகாதார அமைச்சால் இது தொடர்பான அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கின்றது எனக் கூறப்படுகின்றது.

இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான தயாசிறி ஜயசேகரவுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவர் காலி – ஹிக்கடுவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவருடன் அண்மைக்காலமாக நெருங்கியிருந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சின் ஊடாக ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.