மன்னாரில் இதுவரை 31 பேருக்குத் தொற்று

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

மன்னாரில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மன்னார் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள். ஏனைய இருவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசிச்சைக்காகச் சென்றபோது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரில் ஒருவர் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண். அவருடைய கணவர் வெளிமாவட்டத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். ஏனைய நபர் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர்களுடன் நெருங்கியை தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.