எதிர்கட்சியே இல்லாத சூழ்நிலை ஏற்படும், கணிக்கிறார் கருணா அம்மான்

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.

தேவையற்றவர்களுக்கு வாக்களிப்பீர்களாக இருந்தால் உங்கள் வளத்தை இழப்பீர்கள் என்பதை தான் தெரிவித்துக் கொள்வதாக கருணா அம்மான் கூறினார்.

நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த அரசாங்கம் மதிப்பிற்குரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கிட்டத்தட்ட 20 வருடங்கள் நிலைத்து நிற்க வாய்ப்பிருக்கின்றதாக அவர் குறிப்பிட்டார்.

ஏனென்றால் எதிர்க்கட்சியே இன்று இல்லாத நிலை ஏற்பட்டிருக்கின்றதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்திருக்கின்றதால் இதிலே அரசுடன் பலம் மிக்கவர்கள் யாரென்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கருணா அம்மான் இதன்போது தெரிவித்தார்.

ஆகவே தாம் வெற்றியடைந்து அரசுடன் இணைந்து பாரிய சேவையாற்ற வேண்டும் என்பதற்காககத் தான் இன்று களமிறங்கியுள்ளதாக விநாயகமூர்த்தி முரளிதரன் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Comments are closed.