பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்.

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது இனந்தெரியாத குழுவினரொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு, தாக்குதலை மேற்கொண்ட குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.