கொழும்பு நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு.

கொழும்பு நகரிலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வாக ‘பார்க் அன்ட் ரைட் சிற்றி’ பஸ் சேவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாகன ஒழுங்குபடுத்தல், பஸ் சேவை, ரயில் பெட்டி மற்றும் மோட்டார் வாகன துறை இராஜாங்க அமைச்சின் வழிநடத்தலின் கீழ் இலங்கை போக்குவரத்து சபை இந்த செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய பரீட்சார்த்த செயற்றிட்டமாக இது ஆரம்பித்துவைக்கப்பட்டது.

நாளாந்தம் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த பஸ் சேவையில் 64 பஸ் வண்டிகள் இணைந்துக் கொள்ளவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.