வடக்கில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று.

வடக்கில் மேலும் 10 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று.

வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 416 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதில், யாழ். மாவட்டத்தில் ஏழு பேருக்குக் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஐவர் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் உள்ளவர்கள்.ஏனைய இருவரும் ஜம்புகோளப்பட்டினம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளவர்கள்.

இதேவேளை,ஏனைய மூவரில் இருவர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள். மற்றையவர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்”என்றார்

Leave A Reply

Your email address will not be published.