பூநகரியில் 3 பிள்ளைகளின் தாய் படுகொலை! – சந்தேகத்தில் கணவர் கைது

கிளிநொச்சி மாவட்டம், பூநகரிப் பகுதியில் இன்று மாலை குடும்பப் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தில் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெளிகரை பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

தெளிகரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றுப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண் 37 வயதுடை ரூபஸ் கிருஷ்ணகுமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.