வவுனியாவில் இரண்டு வாரத்தில் 201 பேருக்கு கொரோனாத் தொற்று.

வவுனியாவில் இரண்டு வாரத்தில்
201 பேருக்கு கொரோனாத் தொற்று.

வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின.

அதனடிப்படையில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள வியாபார நிலையங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணிய 24 பேருக்குத் தொற்று இருக்கின்றமை இன்று உறுதி செய்யப்பட்டது.

வெளிக்குளம், தெற்கிலுப்பைக்குளம், மகாறம்பைக்குளம், பட்டாணிசூர், வேப்பங்குளம், பட்டக்காடு, கந்தசுவாமி கோவில் வீதி, வெளிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர கொத்தணி ஒரு வாரத்தில் மாத்திரம் 201 அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.