வவுனியா பத்து வயதுச் சிறுமிக்கு கொரணா தொற்று.

வவுனியா வடக்குபகுதியில் மாரா இலுப்பை கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரிந்துவரும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவரது மகளான 10 வயதான சிறுமிக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.