வெவ்வேறு பகுதிகளில் இரு சடலங்கள் வவுனியாவில் மீட்பு.

வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தரணிக்குளம் பகுதியை சேர்ந்த ஆ.யேசுதாசன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த ஊர் மக்கள் ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற ஈச்சங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்திய சாலைக்கு அனுப்பிய அவைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியா கூமாங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலமும் வவுனியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த 26 வயதான குடும்ப பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உள்ளதாக வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.