ஆயுர்வேத பானம் தம்பிலுவில் ஆயுர்வேத வைத்தியசாலையினால் வழங்கி வைப்பு.

கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் பானம் தம்பிலுவில் ஆயுர்வேத வைத்தியசாலையினால் திருக்கோவில் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மக்களிடம் நேரடியாக சென்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

சுதேச ஆயுர்வேத மாகாண ஆணையாளர் வைத்தியர் ஆர்.சிறிதரின் ஆலோசனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கல்முனை வைத்தியர் ஜி.சுகுணன் மற்றும் கல்முனை பிராந்திய தொடர்பாளர், வைத்தியர் எம்.எ.நபீலின் வழிகாட்டலில் தம்பிலுவில்  ஆயுர்வேத மத்திய மருந்தகம் ஏற்பாட்டில்   இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் 1000 பைக்கற்றுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.