நாளைமுதல் கட்டுநாயக்கா விமானம் நிலையங்கள் திறக்கப்படுகிறது.

விமான நிலையங்கள் நாளை திறக்கப்படுகின்றன. எந்த நாட்டு விமானங்களும் வரலாம்.

நாளை (21) முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளன இதற்காக சகல ஒழங்கமைப்புக்களும் நிறைவடைந்துள்ளன. என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம் ஆம் திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. எனினும், முதற்கட்டமாக அண்மைய சில நாட்களாக யுக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டுக்கு பிரவேசிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் சுற்றுலா பயணிகள் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களின் போது ஏழு பயணிகள் விமானங்கள் மட்டுமே இலங்கைக்கு பறந்தன என கூறினார்.

நாளைமுதல் எந்தவொரு பயணிகள் விமானமும் இலங்கைக்கு வர முடியும், அதே நேரத்தில் தனியார் ஜெட் விமானங்களும் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர முடியும்.

Leave A Reply

Your email address will not be published.