துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைவெளிநாட்டுக்குத் தாரைவார்க்காதீர்,மைத்திரியும் போர்க்கொடி.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைவெளிநாட்டுக்குத் தாரைவார்க்காதீர்! மைத்திரியும் போர்க்கொடி

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் எதற்கும் வழங்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

“நான் ஜனாதிபதியாக இருந்தபோது, கிழக்கு முனையத்தை வழங்குமாறு வெளிநாடுகள் கேட்டபோதும், அதற்கு நான் இணங்கியிருக்கவில்லை.

அதனை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கும் கொடுக்க மாட்டேன் என்று 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதியை எனது பதவிக் காலத்தில் அவ்வாறே பேணினேன்” – என்றார்.

இதேவேளை, கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா குறிப்பிடுகையில்,

“துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கமாட்டோம் என்று ஜனாதிபதி தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால், கிழக்கு முனையத்துக்கு 50 வீதத்துக்கும் குறைவான முதலீடு வருமாக இருந்தால் அந்த முனையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதாக அர்த்தப்படுத்திப் பார்க்கக்கூடாது”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.