பாணந்துறை பல்லேமுல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு,ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் பகுதியிலுள்ள பல்லேமுல்ல பிரதேசத்தில் இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவரே சூட்டுக்காயத்துக்கு ஆளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியோர் மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி தலைக்கவசம் அணிந்திருந்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ரி 56 ரக துப்பாக்கியின் 4 சன்னங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை தாக்குதலுக்கு ஆளானவர் பாணந்துறை எகொடஉயனவைச் சேர்ந்த 32 வயதுள்ளவர் என்றும் பாணந்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பாணந்துறை ஆதார வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல் மேற்கொண்டோரை அடையாளம் காண விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.