வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 311ஆக அதிகரிப்பு.

வவுனியாவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரை அண்மித்த பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்
வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒருபகுதி முடிவுகள் வெளியாகியது.

அதனடிப்படையில் வவுனியாவின் நகரப்பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றும் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

அடையாளம் காணப்பட்ட நபர்களுடன் கடந்த ஒருமாத காலப்பகுதியில் வவுனியாவில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 311ஆக அதிகரித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.