இலங்கைக்கு இனி மீட்சி இல்லை; ஜோ பைடன் குழுவும் கிடுக்குப்பிடி.

இலங்கைக்கு இனி மீட்சி இல்லை;
ஜோ பைடன் குழுவும் கிடுக்குப்பிடி.

அமெரிக்கத் தூதுவரின் கருத்தில் அம்பலம்

“ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும்.”

இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமெரிக்கா மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இணைந்துகொள்ளுமா என்பது குறித்து தற்போதைக்குத் தெரிவிக்க முடியாது.

எனினும், ஏனைய நாடுகள் மூலமாக இலங்கையில் உண்மையான அமைதி காணப்படுவதை உறுதிசெய்வதற்கா அமெரிக்கா பாடுபடும்.

இலங்கையின் முன்னைய அரசின் ஆட்சியிலும் தற்போதைய அரசின் ஆட்சியிலும் மனித உரிமை விடயங்களில் முன்னேற்றம் மிகவும் மந்தகதியிலேயே காணப்படுகின்றது.

மனித உரிமைக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதை இலங்கையுடன் வலிந்து மோதலில் ஈடுபடுவதாக எவரும் கருதக்கூடாது”என்றார்.

Leave A Reply

Your email address will not be published.