கேரளா : ஒரே வாரத்தில் மருமகளும் மாமியாரும் மரணம்.

கேரளாவில் திருவனந்தபுரம் கல்லம்பலம் என்ற ஊரை சேர்ந்த ஆதிரை என்ற இளம் பெண் ஜனுவரி 15 ஆம் தேதி சந்தேகத்துகிடமாக இறந்து கண்டுபிடிக்கப்பட்டார்.

திருமணம் ஆகி ஒன்றரை மாதத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற 24 வயது பெண் ஆதிரா கை மற்றும் கழுத்து அறுந்த நிலையில் வீட்டு குளியல் அறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் இறப்பு தற்கொலையல்ல, கொலையே என்றும் , மாமியார் சியாமளாதான் கொலையாளியாக இருக்கக்கூடும் என்றும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

ஆதிரைக்கு ஃபோன் பாவிப்பது தடை செய்யப்பட்டிருந்துள்ளது. மணப்பெண்னை தன் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி நண்பிகளுடன் கூட உரையாட மாமியார் அனுமதிக்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்த பெண்ணை மரணத்திற்குள் தள்ளியது மாமியாரின் கெடுபிடியே என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. மாமனாரும் தன் மருமகள் தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை , காவல்த்துறை மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுவித்திருந்தார்.

இந்நிலையில் மருமகள் இறந்த பத்தாவது நாள், நேற்று மாமியாரும் மன அழுத்தம் தாங்காது வீட்டினருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது.

இரு மரணங்களை ஒரே வீட்டில் கண்ட உறவினர்களும் உற்றாரும் பீதியடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.