மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று காலமானார்

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா தனது 94வது வயதில் இன்று 28.01.2021 மாலை காலமானார்.

வெகு காலமாக சுகவீனமாக இருந்த நிலையில் அவர் உயிர் துறந்துள்ளார்.

இறுதிச் சடங்கு விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

1927ம் ஆண்டு யூன் 27ம் திகதி யாழ்பாணத்தில் பிறந்த டொமினிக் ஜீவா பிரபலமான ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.
இவரது எழுத்துகள் அனைவராலும் விரும்பப்பட்டதோடு இவர் எழுதிய இவரது தண்ணீரும் கண்ணீரும் சிறு கதை தொகுப்பு சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.
இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.

Leave A Reply

Your email address will not be published.