வடக்கில் மாகாணத்தில் இன்று 2997 பேருக்குத் தடுப்பூசி ஏற்றல்

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் செயற்றிட்டத்தின் முதலாவது நாளாகிய இன்று 2 ஆயிரத்து 997 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் 1,586 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 448 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் – 360 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 313 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 290 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்துக்கெனப் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் 30 சதவிகிதமானவை இன்று செலுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.