வடக்கில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி! – பொலிஸ் அதிகாரி எனத் தெரிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் வவுனியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.