தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்குக் களுவாஞ்சிக்குடியில் தடை உத்தரவு! கண்டித்து அறிக்கை.

தமிழின அழிப்புக்கு எதிரான போராட்டத்துக்குக் களுவாஞ்சிக்குடியில் தடை உத்தரவு!கண்டித்து சாணக்கியன் எம்.பி. அறிக்கை.

தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு முதலாவது தடை உத்தரவு களுவாஞ்சிக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன என்று தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்தத் தகவலை அவர் அறிக்கையூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவால் எனக்கு இம்மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரால் நீதிமன்றத்தை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், இந்த விடயம் தொடர்பாக கொரோனாவைக் காரணம் காட்டி, கொரோனா காலப்பகுதியில், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியைப் பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனச் சொல்லி நீதிமன்றத்தைப் பொலிஸார் நாடியுள்ளனர்.

ஆனால், கொழும்பில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குப் பொலிஸாரால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனெனில் அது அரசுடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்தபோது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அதற்கு முன்னரான காலப்பகுதியில், அதாவது கொரோனா ஆகக்கூடுதலாக இருந்த காலப்பகுதியில் கூட அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் நடைபெற்ற நடை பவனி நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு போடாத பொலிஸாரால், ஒரு ஜனநாயக விரோதமான அரசுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நீதிக்கான போராட்டங்களுக்கு மட்டும் தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம்.

இது நான் எதிர்பார்த ஒரு விடயம்தான். எனக்குப் பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்றத் தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன. நான் நினைக்கின்றேன் கடந்த ஒரு ஆறுமாத காலமாக 10 இற்கும் மேற்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவுகள் எனக்குக் கிடைத்துள்ளன. தடை உத்தரவுகள் கிடைப்பது தற்போது மதியம் உணவருந்துவது போல் ஒரு இயல்பான விடயமாக எனக்கு மாறியுள்ளது.

இதில் குறிப்பாக ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரின்போது இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கு எதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விதமாக நாங்கள் செயற்படுவோம் எனக் கூறி இந்தத் தடை உத்தரவை எடுத்திருந்தாலும்கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதைத் தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசு, இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கு எதிரான பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்தப் போராட்டம் கூட அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை விவகாரம், தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” – என்றுள்ளது.டித்து சாணக்கியன் எம்.பி. அறிக்கை

தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு முதலாவது தடை உத்தரவு களுவாஞ்சிக்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வின்போது, மக்களைத் தூண்டிவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன என்று தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இந்தத் தகவலை அவர் அறிக்கையூடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவால் எனக்கு இம்மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரால் நீதிமன்றத்தை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகவும் வேடிக்கை என்னவென்றால், இந்த விடயம் தொடர்பாக கொரோனாவைக் காரணம் காட்டி, கொரோனா காலப்பகுதியில், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், சமூக இடைவெளியைப் பேணாமல் ஆர்ப்பாட்டங்கள் செய்யப்படக் கூடாது எனச் சொல்லி நீதிமன்றத்தைப் பொலிஸார் நாடியுள்ளனர்.

ஆனால், கொழும்பில் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்குப் பொலிஸாரால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனெனில் அது அரசுடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்தபோது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக்கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரால் எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை.

அதற்கு முன்னரான காலப்பகுதியில், அதாவது கொரோனா ஆகக்கூடுதலாக இருந்த காலப்பகுதியில் கூட அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையடுத்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் நடைபெற்ற நடை பவனி நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு போடாத பொலிஸாரால், ஒரு ஜனநாயக விரோதமான அரசுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கின்ற நீதிக்கான போராட்டங்களுக்கு மட்டும் தடை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை ஒரு வேடிக்கையான விடயம்.

இது நான் எதிர்பார்த ஒரு விடயம்தான். எனக்குப் பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று நீதிமன்றத் தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன. நான் நினைக்கின்றேன் கடந்த ஒரு ஆறுமாத காலமாக 10 இற்கும் மேற்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவுகள் எனக்குக் கிடைத்துள்ளன. தடை உத்தரவுகள் கிடைப்பது தற்போது மதியம் உணவருந்துவது போல் ஒரு இயல்பான விடயமாக எனக்கு மாறியுள்ளது.

இதில் குறிப்பாக ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபை கூட்டத்தொடரின்போது இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுக்கு எதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விதமாக நாங்கள் செயற்படுவோம் எனக் கூறி இந்தத் தடை உத்தரவை எடுத்திருந்தாலும்கூட, உண்மையில் அப்படியாக இருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதைத் தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசு, இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கு எதிரான பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்தப் போராட்டம் கூட அமைதியான போராட்டம். 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை விவகாரம், தோட்டத்தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.