கருவுடன் ரிஷாத் அணி இன்று முக்கிய சந்திப்பு.

கருவுடன் ரிஷாத் அணி இன்று முக்கிய சந்திப்பு.

சிறுபான்மை சமூகம் எதிர்நோக்கும்
பிரச்சினை குறித்து கலந்துரையாடல்.

சிறுபான்மை பிரச்சனைகள் தொடர்பில் மக்கள் காங்கிரஸ்- கருஜயசூரியவுடன் கலந்துரையாடல்

நியாயமான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட உயர்பீட உறுப்பினர்கள் இன்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது நியாயமான சமூகத்துக்கான தேசிய இயக்கம், கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதற்காகவும், விசேடமாக முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் எதிர்ப்பை வெளியிட்டமைக்கும் அவ்வமைப்புக்கு தமது நன்றிகளை ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை சமூகம் தற்போது எதிர்நோக்கியுள்ள காணிப் பிரச்சினை, இராணுவ மயமாக்கல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பிலும் கரு ஜயசூரியவிடம் அவர் தெளிவுபடுத்தினார்.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் எஸ்.சுபைர்தீன், சிரேஷ்ட பிரதித் தலைவர் சஹீட் மற்றும் பொருளாளர் ஹுசைன் பைலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.