உர மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி.

நெற் பயிற்செய்கைக்கான உரமானியம் தொடர்ந்தும் வழங்கப்படும்.

நெற் பயிற்செய்கைக்கான உர மானியத்தைத் தொடர்ந்தும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பிற பயிர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு உட்பட்ட உர மானியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானியம் பல்வேறு நிறுவனங்களால் தவறாக பயன்படுத்தப் படுகின்றது.

நெல் விவசாயிகளுக்கு வழங்குகின்ற மானியத்தை அவ்வாறே வழங்குவதற்கும் அதே மானியத்தை ஏனைய விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை வழங்குவதற்கும் நாம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளோம் என்றும் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.