ஒருவருட கற்கை நெறியை பூர்த்தி செய்வதற்காக லண்டன் சென்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுளார்.

லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

ஒருவருட கற்கை நெறி ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர் லண்ட செல்வதாக கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது மகளுக்காக தொடர்ந்தும் குண்டுமழை நடுவில் பணியாற்றியிருந்தமை தெரிந்ததே.

மேலும், இலங்கையில் ஊழலற்ற அரச அதிகாரி என்ற விருதையும் கடந்த ஆண்டு இவர் பெற்றிருந்தார்.

கொரோனா காலத்தில் யாழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி சிகிச்சைமையமாக மாற்றப்பட்டதும் அங்கு அனுமதிகப்பட்டிருந்த நோயாளர்களுடன் கரிசனையாக பழகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.