மொட்டு கட்சி தலைவரை நியமிக்க விமல் யார்? : மொட்டு விமல் இடையே குழப்பம்

பொதுஜன  முன்னணியின் தலைவராக ஜனாதிபதி கோதபய ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என்ற அறிக்கைக்கு அமைச்சர் விமல் வீரவன்ச மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பொதுஜன முன்னணியின் செயலாளர் எம்.பி. சாகரா கரியவாசம்  மொட்டு கட்சியில்  இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இதனைக் தெரிவித்துள்ளார்.

கரியவாசம் , மொட்டு கட்சி   விமல் வீரவன்சாவின் கட்சி அல்ல என்றும் , எனவே  மொட்டு கட்சி பிரச்சினைகள் குறித்து அறிக்கைகளை வெளியிட அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் ,  அவரது அறிக்கையை மூன்றாம் தர அறிக்கை என்று கூறலாம் என்றும் அவர் மேலும் சாடியுள்ளார்.

அத்தகைய நபர் தலைமையிலான கட்சி தங்களது கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது வருத்தமளிப்பதாக திரு சாகரா கரியவாசம் மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் மொட்டு கட்சி இடையே ஒரு சர்ச்சை எழுந்துள்ளது, மேலும் விமல் வீரவங்ச ஒரு வார பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, ​​மொட்டின் செயலாளர் தனது கருத்துக்களால் வருத்தப்படுவதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave A Reply

Your email address will not be published.