ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம்.

தோட்ட பகுதிகளிலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் வெற்றிடங்களுக்கு க.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கடந்த 06 ஆம் திகதியன்று கேகாலை மாவட்டத்தில் உள்ள தெரணியகல பிரதேச செயலக பிரிவில் திக்கெல்லகந்த கிராம சேவகர் பிரிவில் உள்ள திக்கெல்லகந்த கனிஷ்ட வித்தியாலய வளாகத்தில் நடைபெற்ற ஒன்பதாவது ´கிராமத்துடன் உரையாடல்´ நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.