மாவட்ட குடிநீர் விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

மாவட்ட குடிநீர் விஸ்தரிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள
குடிநீர் விநியோக விஸ்தரிப்பு திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நேற்று(10) மு.ப 11.00மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகாலம் எனும் மூன்று வகைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்ந கால திட்டங்களின் நிலைமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் மாகாண உதவி முகாமையாளர், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், பொறியியலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்ட உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.