போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேக நபர் இந்தியாவில் கைது.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிலியந்தலை பகுதியில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான, மொஹமட் நவாஸ் இந்தியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பிலேயே மொஹமட் நவாஸ் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டதாக, இந்திய பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.