திருக்கோவில் பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு தொடர்பான மக்கள் கருத்தறியும் செயற்றிட்டம்.

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று திருக்கோவில்‍ தொடக்கம் கோமாரி வரையிலான கடற்கரை வழியாக இல்மனைட் கனிய மணல் அகழ்வு திட்டத்திற்கான சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (E I A) அறிக்கை முறையாக திருக்கோவில் பிரதேச சபை, திருக்கோவில் பிரதேச செயலகம், பொத்துவில் பிரதேச சபை, பொத்துவில் பிரதேச செயலகம், அட்டாளைச் சேனை பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திலும் (21/01/2021) தொடக்கம் (12/03/2021) வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுவதோடு பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதே சட்ட ரீதியான நியதி, இதனடிப்படையில்

நாளை தொடக்கம் பொதுமக்கள், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளுக்கு சென்று, இத் திட்டம் தொடர்பான மக்கள் அறிக்கையிடும் பகுதியில் உங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.

சதாசிவம் நிரோசன்

Leave A Reply

Your email address will not be published.