சீனாவின் தியான்வென் -1 ஆய்வுக்கலம் செவ்வாயின் சுற்றுபாதைக்குள் நுழைந்தது.

சீனாவின் தியான்வென் -1 ஆய்வுக்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதைக்குள் வெற்றிக்கரமாக நுழைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவின் ஹைனான் மாகாணத்திலிருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்ட தியான்வென் கலம் சுமார் 7 மாத பயணத்துக்கு பின்னர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்துள்ளது.

இது வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தின் சுற்றுச்சூழல், மண் மற்றும் நீர் உள்ளதா என்பது குறித்த ஆய்வுக்காக சீனா தியான்வென் 1 விண்கலத்தை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.