யாழில் பஸ் நடத்துநருக்குக் கொரோனா!

யாழில் பஸ் நடத்துநருக்குக் கொரோனா! – வடக்கில் இன்று 7 பேருக்குத் தொற்று உறுதி

யாழ். பஸ் நடத்துநர் உட்பட 7 பேருக்கு வடக்கு மாகாணத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் நடத்துநர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்றபோது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சியில் ஒருவருக்கும், வவுனியாவில் இருவருக்கும், மன்னாரில் கர்ப்பிணிப்பெண், ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட மூவருக்கும் இன்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.