இலங்கையில் இன்றும் 936 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

இலங்கையில் இன்றும் 936 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி!

இலங்கையில் இன்றும் 936 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றாளர்கள் அனைவரும், ஏற்கனவே கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 52 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில், இன்றும் 773 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறிய நிலையில், 66 ஆயிரத்து 984 பேர், இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதனால், குணமடைந்தவர்களைத் தவிர்த்து, 6 ஆயிரத்து 689 பேர், தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.