இலங்கையில் மேலும் ஐவர் சாவு! கொரோனா காவு 384 ஆக உயர்வு.

இலங்கையில் மேலும் ஐவர் சாவு! கொரோனா காவு 384 ஆக உயர்வு.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவரும், கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஆண் ஒருவரும், மத்துகமை பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு – 08 ஐச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவரும், கொழும்பு 12 ஐச் சேர்ந்த 49 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.