சஜித் ரணில் சந்திப்பு !

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் மலிக் சமரவிக்ரம வீட்டில் இந்த தலைவர்கள் இருவரும் சந்தித்துள்ளதுடன் அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டும் அதன்போது கலந்துளையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தமது பெயர் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சித் தலைவராக, பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதால், தனது பொறுப்புகளை நிறைவேற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.