நெல்லியடி மரக்கறி வியாபாரிக்குக் கொரோனா! – இழுத்து மூடப்பட்டது சந்தை

யாழ். வடமராட்சி, நெல்லியடி மரக்கறிச் சந்தையில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஆண் வியாபாரி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து நெல்லியடி மரக்கறிச் சந்தை இன்று முதல் மறு அறிவித்தல் வரும்வரை இழுத்து மூடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.