கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட உடுப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு.

வடமராட்சி, தொண்டமானாறு சின்னக் கடலில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சுயநினைவற்ற நிலையோடு மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தார் என்று ஊரணி பிரதேச வைத்தியசாலையில் மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று 21.02.2021 மாலை 5 மணியளவில் இடம்பெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்பு கடலில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டார்.

உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

உடுப்பிட்டி சந்தை பகுதியைச் சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது 17) சிறுவனே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெறுள்ளது. மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.