முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் வளைவில் வேலியால் கார் பாய்ந்து விபத்து!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் வளைவில் வேலியால் கார் பாய்ந்து விபத்து!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பம் மரத்துடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.

கிளிநொச்சியில் இருந்து சென்று குறித்த கார் நள்ளிரவு 12.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகமாக சென்ற கார் தேராவில் வளைவில் திருப்பமுடியாத நிலையில் காணி ஒன்றுக்குள் பாய்ந்து மின்கம்பத்தினை உடைத்துள்ளி பனைமர கன்று ஒன்றினை மோதி சல்லடையாகியுள்ளது இதில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளபோதும் தெய்வாதீனமாக காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பியுள்ளார்கள்.

இந்த விபத்தின் போது கார் கடுமமையன சேதத்திற்கு உள்ளாகியள்ளதுடன் விபத்து குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றார்கள்.

Leave A Reply

Your email address will not be published.