இந்தியாவிலிருந்து மேலும் 5இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசி நாளை கிடைக்கவுள்ளது.

இந்தியாவிலிருந்து மேலும் 5இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் நாளை நாட்டுக்கு கிடைக்கும் என பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்யப்படும் மேற்படி தடுப்பூசிகள் நாளை இரவு நாட்டை வந்தடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து சில தரப்பினர் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ள தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,அது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சில தரப்பினர் தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு முரணாக தமது பதவிகள் மற்றும் வேறு செல்வாக்குகளைப் பயன்படுத்தி அழுத்தங்களை பிரயோகித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன,பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ள பல சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.