பாகிஸ்தான் பிரதமர் விளையாட்டு அமைச்சர் மற்றும் முன்னாள் வீரர்களையும் சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விளையாட்டு அமைச்சர் மற்றும் முன்னாள் வீரர்களையும் சந்திப்பு.

இன்று மாலை பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆகியோரை இன்று சந்தித்தார்.

இந்த கலந்துரையாடலின் போது அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டீ சில்வா, ஹசன் திலகரத்ன, சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, சமிந்த வாஸ், ரமேஷ் கலுவித்தாரன, ஜெயசிங்க சுசந்திகா போன்ற இலங்கை விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் துடுப்பு மட்டையில் அவரின் கையொப்பம் , நினைவுச் சின்னத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதன்போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்தும் விரிவாக உரையாடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.