கொழும்பில் இடம்பெற்ற ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்’ கலந்து கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று (2021.02.24) முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ‘வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில்’ கலந்து கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர்கள் இருவரும் நேற்றைய தினம் (23) அலரி மாளிகையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்தனர்.

இவ் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு இருநாட்டு முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவர்களது எண்ணப்படி எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்ட அரிய சந்தர்ப்பமாகும்.

Leave A Reply

Your email address will not be published.