கொரோனா தொற்றால் மேலும் ஐவர் பலி! – மொத்தச் சாவு 464 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.

அதற்கமைய நாவடகல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர், நாரஹேன்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 72 வயதான பெண், கண்டியைச் சேர்ந்த 70 வயது ஆண், கொழும்பு – 09 ஐச் சேர்ந்த 71 வயது ஆண் மற்றும் வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 464 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் அரச தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.