நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி? எப்போது, எவ்வளவு குடிக்க வேண்டும்?

தேவையான மூலப்பொருள்கள்

நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு – இந்த 9 மூலிகைகளத்தான் நிலவேம்பு குடிநீர் தயாரிக்க நாம பயன்படுத்துறோம்.

தயாரிக்கும் முறை (Nilavembu Kashayam Preparation in Tamil)
இந்த மூலப்பொருள்கள ஒவ்வொன்னையும் சம அளவு எடுத்துக்கணும்.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் கூட 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்கா வத்தும் வரைக்கும் கொதிக்க வைக்கணும். அப்புறமா ஆற வச்சு வடிகட்டினா நிலவேம்புக் குடிநீர் தயாராகிடும்.

உதாரணத்துக்கு, 5 கிராம் மூலிகைகள்கூட 200 மில்லி தண்ணி சேர்த்து, அது 50 மில்லியா வத்திய பிறகு அதை ஆற வச்சு குடிக்கலாம்.

எப்படிக் குடிக்க வேண்டும்?

நிலவேம்பு கசாயம், நிலவேம்பு குடிநீர், Nilavembu Kashayam, Nilavembu Kudineer

நிலவேம்புக் குடிநீர, இளஞ்சூடாக குடிப்பதுதான் நல்லது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள்ள குடிச்சிடணும். நேரம் போகப் போக, அதோட வீரியம் குறைஞ்சிடும். அதேபோல, நேத்து தயார் செஞ்ச நிலவேம்புக் குடிநீர, அடுத்த நாள்வரைக்கும் வச்சி குடிக்கறத தவிர்க்கணும். ஃபிரிஜ்ல வச்சு குடிக்கற தப்ப செய்ய மாட்டீங்கன்னு நம்புறேன்.

எப்போது, எவ்வளவு குடிக்கலாம்?

காலையிலயும் இரவும் உணவுக்கு முன்னாடி இரண்டு வேள நிலவேம்பு குடிநீர குடிக்கலாம்.

ஒருத்தரோட வயசப் பொருத்து நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை குடிக்கலாம். குழந்தைகளும் கர்ப்பிணி பெண்களும் மருத்துவரோட ஆலோசனைய பெற்று குடிக்கணும்.

2 முதல் 5 வயசுள்ள குழந்தைக ஒருநாளைக்கு 5 மி.லி, 5 முதல் 8 வயசுள்ள குழந்தைக ஒருநாளைக்கு 10 மி.லி, 8 முதல் 12 வயசுள்ள பசங்க 20 மி.லி, 12 முதல் 15 வயசுள்ள பசங்க 30 மி.லி, 15 வயசுக்கு மேல உள்ள பெரியவங்க 50 மி.லி வரை குடிக்கலாம்.

நிலவேம்பு என்கிற சிறியாநங்கை செடி, வெட்டிவேர், விளாமிச்சை வேர், பற்படாகம், பேய் புடல், கோரைகிழங்கு, சந்தனதூள், சுக்கு, மிளகு ஆகிய 9 பொருட்களையும் சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் பொடிக்கு 200 மில்லி தண்ணீர் வைத்து  கொதிக்க விட வேண்டும். இந்த 200 மில்லி தண்ணீர் 50 மில்லி தண்ணீராக வற்றியவுடன் அதனை வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்க  வேண்டும்.
இந்த கசாயத்தை தயார் செய்த 4 மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் என்பது 9 மூலிகைகளின் கூட்டுப்பொருள். இந்த கசாயத்தை குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திதான் அதிகரிக்குமே தவிர நோய்கள் வராது. மலட்டுத்தன்மை ஏற்படாது.
சித்த மருத்துவத்தால் எந்த வித பக்க விளைவோ, பாதிப்போ ஒரு காலமும் ஏற்படாது. தற்போது பெரும்பாலானவர்கள் சித்த மருத்துவத்தை  நாடி வருகிறார்கள்.
நிலவேம்பு கசாயத்தில் சந்தனம் சேர்ப்பது உடலுக்கு தேவையான குளிர்ச்சியை கொடுக்கும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் ரத்தத்தின் தட்டணுக்கள் அதிகரிக்கும். எனவே மக்கள் யாரும் பயப்படாமல் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.