உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு 12 மாதங்களாக குறைப்பு.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவு ஆனது 12 மாதங்களாக குறைக்கப்பட்ட தன் விளைவாக தற்போது அவர் மீண்டும் கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.

கடந்த ஆண்டு உமர் அக்மல் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் கலந்துகொள்ளும் போது அவரை சில சூதாட்ட தரகர்கள் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் அது குறித்து எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை. இதனால் அவருக்கு கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆண்டு தடை உத்தரவை கிரிக்கெட் வாரியம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து அவர் சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தில் 3 ஆண்டு தடை உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்.

அவருடைய மேல்முறையீட்டை பரிசீலித்த விளையாட்டு நடுவர் மன்றமானது அவருடைய தடையுத்தரவை 12 மாதங்களாக குறைப்பதுடன் ரூ 19.62 லட்சம் அபராதம் விதித்தது. கடந்த ஆண்டு பெப்ரவரி இருபதாம் திகதியிலிருந்து செயல்பட ஆரம்பித்த இந்த தடை உத்தரவு இவ்வாண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துள்ளது . இதனை அடுத்து அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.