டெஸ்ட் போட்டி இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தமை தொடர்பில் யுவராஜ் சிங் டுவிட்டரில் கருத்து.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆனது இரண்டே நாட்களில் முடிவுக்கு வந்தமை தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர அதிரடி துடுப்பாட்ட வீரரான யுவராஜ் சிங் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ் வருமாறு கூறியுள்ளார்.

யுவராஜ் சிங் இந்திய அணியின் வெற்றிக்கு பின்னர் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் இரண்டே நாட்களில் போட்டி முடிந்தது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் இதுபோன்ற மைதானத்தில் அனில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் போன்ற பந்துவீச்சாளர்கள் வீசி இருந்தாள் 800,1000 விக்கெட்டுக்களை வைத்திருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் ரவிச்சந்திரன் மற்றும் அக்ஷர் படெல் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் போட்டி முடிந்த பின் ரோகித் சர்மா கூறியதாவது போட்டி மைதானத்தில் எவ்வித பிரச்சனையும் இல்லை விளையாடிய வீரர்களில் தான் பிரச்சினை என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.