காத்து கருப்பு என பரிகாரம் செய்து ஒன்பது வயதுடைய சிறுமி பலி.

காத்து கருப்பு பிடித்துள்ளதாக கூறி, பிரம்பால் தாக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழப்பு!

அமானுஷ்ய சக்தி (காத்து கருப்பு) பிடித்துள்ளதாக தெரிவித்து அதற்கு பரிகாரம் செய்வதாக கூறி பிரம்பால் தாக்கப்பட்ட 9 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீகஹவத்த கதுபொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த 9 வயது சிறுமி அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இதற்கு பரிகாரம் செய்வதற்காக குறித்த சிறுமியை பெற்றோர் மாந்திரீக வேலை செய்யும் பெண் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது பரிகார பூஜையின் போது அமானுஷ்ய சக்தியை விரட்டுவதற்காக சிறுமி பிரம்பினால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் கடுமையாக சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்து உள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.