மாவட்ட நீச்சல் பயிற்சியில் பெருமளவான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

மாவட்ட நீச்சல் பயிற்சியில் பெருமளவான வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!

விளையாட்டுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்ட விளையாட்டுப்பிரிவின் ஒழுங்குபடுத்தலில் 14 வயதிற்க்கு மேற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கணைகளுக்கான நீச்சல் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை(26) மற்றும் சனிக் கிழமை(27) ஆகிய இரு நாட்கள் கிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்டத்தின் திறமையான
வீரர்களை இனம் காணும் வகையில் இடம்பெற்ற குறித்த பயிற்சியில்
மாவட்டத்தின் பெருமளவான வீரர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் இலவச ஒழுங்குபடுத்தலுடன் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.