நாளை முதல் தனியார் பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது.

யாழ்ப்பாணம் முனிஸ்வரன் வீதியில் அமைக்கப்பட்ட புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்துக்கு இ.போ.ச. சபை பேருந்துகள் செல்லமறுப்பதால் நாளையிலிருந்து தனியார் போக்குவரத்துச் சபை பேருந்துகள் நெடுந்தூர பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடாது

என வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்றையதினம் சேவையில் ஈடுபடாது புறக்கணித்திருந்தனர் இதன்காரணமா தனியார் போக்குவரத்து சங்கத்தினர் ஆகிய நாங்களும் குறித்த பேரூந்து நிலையத்தில் சேவை புரிவதே இடைநிறுத்தி நாங்கள் வழமையாக சேவையில் ஈடுபடும் யாழ் நகர மத்திய பேருந்து நிலையத்துக்கு பின்புறமாக எமது பேரூந்துகள் வெளி மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடும் என தெரிவித்தார்

எனவே பொதுமக்கள் வழமையான இடத்தில் எமது சேவையினை பயன்படுத்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.