விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கல்நாட்டு விழா.

கிளிநொச்சி மலையாளபுரத்தில் புதிய பாரதி விளையாட்டுக்கழகத்திற்கான மைதானம் அமைப்பதற்கான அடிக்கலினை கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார்.

பிரதேச செயலக பிரிவுக்கு ஒரு கிராமிய விளையாட்டு மைதானம் என்ற அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சுமார் 325 மைதானங்களை அமைக்கும், கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் வேலைத்திட்டத்திற்கு அமைய கிளிநொச்சி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் இன்று குறித்த வேலைகள் ஆரம்பித்து வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.