இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்.

இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் முல்லைத்தீவு, #ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் டி.அகிலன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (02.03.2021) சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேசவாரியாக மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன. நீர்ப்பாசனம், சுகாதாரம், விவசாய உற்பத்தி, கல்வி நடவடிக்கைகள், வீதி அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு மற்றும் சுரங்க தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் பற்றியும் இங்கு விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள், அரச பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.